தாலிகட்டும் நேரத்தில் தற்கொலை செய்துகொண்ட பொறியியல் பட்டதாரி இளைஞர்!.
திருமணம் நடக்கவிருந்த தேதியில் கல்யாண மாப்பிளை தற்கொலை.
ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து சென்னையில் உள்ள ஒரு கார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார் இவரின் வயது 25. விக்னேஷ்-க்கு திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில் நேற்று திருமணம் நடைபெற இருந்தது.
விக்னேஷ் தனது திருமணத்திற்காக கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே சென்னையில் விடுப்பு எடுத்து ஊருக்கு வந்தார். திருமணம் விழாவிற்காக நேற்று ஊரில் உள்ள அவரது நண்பர்களை வரவழைத்து பார்ட்டி கொடுத்துள்ளார். இந்நிலையில் கொடுமுடி ரெயில்வே தண்டவாள பகுதியில் விக்னேஷ் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்தார்.
அவர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்துவந்த போலீசார் விக்னேஷின் சடலத்தை கைப்பற்றியுள்ளார்கள்.
அவர் தற்கொலை செய்ய காரணம் என்ன என்றும் திருமணம் பிடிக்கவில்லையா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்றும் காவல்துறை விசாரித்து வருகிறார்கள். திருமணம் நடக்கவிருந்த தேதியில் கல்யாண மாப்பிளை தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
erode youngster suicide before marriage