புதிதாக திறக்கப்பட இருக்கும் மதுக்கடை!! போராட்டத்தில் இறங்கிய மக்கள்!!
ERODE : TASMAC OPEN Women Protest
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த போத்தநாயக்கனூர் கிராமத்தில் உள்ள ஒருவரின் விவசாய நிலத்தில், டாஸ்மாக் கடைக்காக கட்டடம் கட்டப்படுகிறது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
தமிழகத்தில் படிப்படியாக மது விலக்கு கொண்டு வரப்படும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்து இருந்தார். இதையடுத்து தமிழகத்தில் 1000 மதுக்கடைகள் மூடப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் மீண்டும் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விவசாய நிலத்தில் கட்டப்பட்டு வரும் டாஸ்மாக் கடையை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
English Summary
ERODE : TASMAC OPEN Women Protest