கோடிக்கணக்கில் பணம் கொழிக்கும்..! ஈரோட்டில் நடந்த இரிடியம் சதுரங்கவேட்டை..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில், இரிடியம் என கூறி, செம்பு பாத்திரத்தை விற்க முயன்ற கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த பாரதிராஜா என்பவர், தங்களிடம் பாரம்பரியமிக்க இரிடியம் இருப்பதாக கூறி, ஈரோடு அருகே உள்ள கொல்லம்பாளையத்தைச் சேர்ந்த சிட்டிபாபு சிங் என்பவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.

மேலும், பாரதிராஜா ஆசை வார்த்தைகளை கூறி, நீங்கள் இந்த தொன்மையான  இரிடியத்தை வீட்டில் வைத்திருந்தால் செல்வம் கொழிக்கும் என்று கூறியதோடு, தங்களுக்கு தெரிந்தவர்க்கு நீங்கள் கூறி என்னுடன் முகவராக பணியாற்ற சொல்லி, சிட்டிபாபு சிங்கை கட்டாயப்படுத்தியுள்ளார்.

பாரதிராஜாவின் திட்டத்தை புரிந்துகொண்ட சிட்டிபாபு சிங், ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல்நிலையத்தில் இதை பற்றி புகார் அளித்தார்.புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், தீவிர விசாரணை நடத்தி பின் பாரதிராஜாவையும், அவனது நண்பர்கள் 4 பேரையும் கைது செய்தனர். அவர்களை விசாரணை செய்ததில், அவர்கள் செம்பு பாத்திரத்தை இரிடியம் என கூறி ஏமாற்ற முயன்றது தெரியவந்தது. 

இந்த இரிடியம் பற்றி நம் காதுக்கு எட்டிய வரை, ''பழம்பெரும் கோயில்களில் உள்ள கோபுர கலசங்கள் இரிடியம் உலோகத்தால் ஆனவை என்றும், இதன் மதிப்பு பல கோடி ரூபாய் மிதப்பு உள்ளதாகவும். இதனை கடந்த சில ஆண்டுகளாக திருடப்படுவதாகவும், கோயில் நிர்வாகிகளின் துணையுடன் அவை திருடப்பட்டு போலி கலசங்கள் மாற்றி வைக்கப்படுவதாகவும்'' கூறப்படுகிறது.

இந்த இரிடியம் பற்றி தமிழ் திரைப்படமான சதுரங்கவேட்டையில் தெளிவாக காட்சி படுத்தி விழிப்புணர்வு செய்துள்ளனர். இருப்பினினும் இது சம்பவங்கள் நடப்பது மக்கள் மீண்டும் மீண்டும் இரிடியம் விடயத்தில் ஏமாந்து போகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

erode people be alert


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->