வீட்டில் பிரிட்ஜை திறந்ததால் வந்த வினை : பரிதாபமாக உயிரிழந்த பொறியாளர்!
கல்பாக்கம் அருகேயுள்ள அணுமின் நிலைய குடியிருப்பில் வசித்து வந்தவர் பொறியாளர் பிஜய்குமார் ஓஜா.
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணிபுரிந்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பொறியாளர் தன்னுடைய வீட்டில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகேயுள்ள அணுமின் நிலைய குடியிருப்பில் வசித்து வந்தவர் பொறியாளர் பிஜய்குமார் ஓஜா.
இவர் தன்னுடைய வீட்டிலுள்ள குளிர்சாதனப் பெட்டியைத் திறக்கும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதாக தெரிகிறது.
இதனையடுத்து அவர் பலத்த சத்தத்துடன் தூக்கிவீசப்பட்டார். அவரது வீட்டில் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அப்பகுதியிலுள்ள டிஏஇ மருத்துவமனைக்கு ஓஜாவை கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஓஜா உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கல்பாக்கம் காவல்துறையினர் பிஜய்குமார் ஓஜாவின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Engineer Bijay Kumar Oja who lived in the apartment near Kalpakkam.