மக்களை மதிக்க தெரியாதவர் ஸ்டாலின்!! நேரடியாக தாக்கிய எடப்பாடி!!  - Seithipunal
Seithipunal


சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளரான சந்திரசேகரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சேத்தியாதோப்பில் பிரச்சாரம் செய்தார். அப்போது, மக்களிடையே பேசிய அவர் என்எல்சி மூன்றாவது சுரங்க விரிவாக்கத்திற்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு விவசாய நிலங்கள் காக்கப்படும்.

Image result for எடப்பாடி  seithipunal

மக்களின் வாழ்வாதாரமும் காக்கப்படும் என உறுதியளித்தார். இதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் உரையாற்றிய எடப்பாடி, "அதிமுக பிரச்சாரங்களில் கூட்டமே இல்லை என மு க ஸ்டாலின் குற்றம்சாட்டி கொண்டிருக்கிறார்.

சாலையில் ஒருவர் நின்றால் கூட நான் பார்த்துவிட்டுத்தான் செல்வேன். அது என்னுடைய குணம். மக்களை மதிக்க தெரியாத அரசியல்வாதியாக ஸ்டாலின் இருக்கிறார். அவர் எப்படி முதலமைச்சர் பதவிக்கு வரமுடியும்? என கேள்வி எழுப்பினார்.

Related image

மேலும், நான் காஜா புயல் பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் பயணம் செய்ததை பயணம் செய்து பார்வையிட்டது குறித்து விமர்சனம் செய்துள்ளார். கேரள முதல்வர் கூட ஹெலிகாப்டரில் தான் பயணம் செய்து வெள்ளத்தை பார்வையிட்டார்" எனக் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edappadi says about stalin behavior


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->