பெண் அமைச்சர்களுடன் சேர்ந்து சட்ட சபையில் நடனம் ஆடிய ஸ்டாலின்!! நாட்டை காப்பாற்ற போகிறார்?! - எடப்பாடி அதிரடி!!
edapadi says about stalin in arakonam
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சிகளும், மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறது. புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி அரக்கோணத்தில் பாமக வேட்பாளரான ஏ.கே,மூர்த்திக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்தார். அப்போது முதல்வர் எடப்பாடி, " திமுக கூட்டணி ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணி.
சமயம் கிடைக்கும்போதெல்லாம் இவர்கள் கூட்டணி சேர்ந்துகொள்வார்கள். உதாரணமாக வைகோ பேசுவதெல்லாம் ஒரு பேச்சா? திமுக எப்படி பேசினார்?
திமுகவில் இருந்து பிரிந்துபோனவர் தற்பொழுது அங்கே கூட்டணியில் சேர்ந்திருக்கிறார். வைகோ சேர்ந்ததும் நல்லதுதான். திமுக கட்சிக்கும், கூட்டணிக்கும் மிகப்பெரிய ராசியாக இருக்கும். வைகோ கூட்டணிக்கும் நல்ல ராசியானவர்.
இந்த ஆட்சியையே ஸ்டாலின் கலைக்கப் பார்த்தார். சட்டமன்றத்தில் நடந்ததை நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள். என்ன ஆட்டம் ஆடினார் தெரியுமா?
எனது மேசையின் மீது ஏறி ஒரே ஆட்டம், பாட்டம். பற்றாக்குறைக்கு பெண் அமைச்சர் கூட அங்குலல்ல மேசையின் மீது ஏறி நடனம் ஆடினார்கள். இப்படிப்பட்டவர்களா நாட்டைக் காப்பாற்றுபவர்கள்? "என பொதுமக்களிடம் கேள்வி எழுப்பினார் .
English Summary
edapadi says about stalin in arakonam