தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது - இபிஎஸ் பரபரப்பு பேட்டி.!
edapadi palanisamy speech about dmk govt
தஞ்சை திலகர் திடலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், காவிரி மேலாண்மை ஆணையம் தனது வரையறுக்கப்பட்ட பணி வரம்புக்கு அப்பாற்பட்டு 28-வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவது குறித்து விவாதித்து மேல் நடவடிக்கைக்காக மத்திய நீர்வள ஆணையத்துக்கு அனுப்பியதை கண்டித்தும், காவிரி நீர் விஷயத்தில் துரோகம் இழைத்து வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், தொடர்ந்து விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து வரும் தி.மு.க. அரசை கண்டித்தும் நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் புதுக்கோட்டை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க.நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, "மீண்டும் தப்பித்தவறி தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது.
இதை நான் அ. தி.மு.க.வின் பொதுச் செயலாளராக இருந்து பேசவில்லை, எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்து பேசவில்லை, முன்னாள் முதலமைச்சராகவும் இருந்து பேசவில்லை. சாதாரண விவசாயி என்ற முறையில் என் மனதில் பட்டதை வெளிப்படுத்துகிறேன்.
தி.மு.க. ஆட்சியிலே விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. விவசாய தொழிலாளிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி தாருங்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள். உங்கள் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
edapadi palanisamy speech about dmk govt