காங்கிரஸ் கட்சியின் முகத்திரையை கிழித்த எடப்பாடி!! கரூரில் பிரச்சாரம்!!
Edapadi palanisamy speech about congress
கரூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, திமுக மற்றும் காங்கிரஸ் பதவியில் இருக்கும்போது, விவசாயிகளைப் பற்றி நினைத்துக்கூட பார்த்ததில்லை.
காவிரி நதிநீரை பங்கேற்பதற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஜெயலலிதா தான் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று தமிழக உரிமையை நிலை நாட்டினார். நீர் மேலாண்மை குறித்து எவரும் கவலை கொள்ளவில்லை.
தேர்தல் சமயத்தில் மட்டும் திமுக காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு கேட்க வந்து நாங்கள் அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என கூறுகின்றனர். மக்கள் இதனை நம்ப மறுக்கின்றனர். ஒரே தொகுதியில் நின்றால் மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால், காங்கிரஸ் வேட்பாளர்கள் தொகுதி மாறி, மாறி போட்டிடுகின்றனர்.
ஆனால், நமது வேட்பாளர் தம்பிதுரை அப்படி இல்லை. அனுபவம் வாய்ந்தவர். தொகுதிகளில் உங்களோடு வாழ்ந்தவர். உங்களிடம் குறைகளை கேட்க வந்துள்ளார். நீங்கள் இரட்டை இலைச் சின்னத்தில் அவருக்கு வாக்களித்து வாய்ப்பு வழங்க வேண்டும்." என கேட்டுக்கொண்டார்.
English Summary
Edapadi palanisamy speech about congress