தமிழர்களுக்கு முதல்வர் எடப்பாடி வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!! கொண்டாட்டத்தில் தமிழர்கள்!!
edapadi palanisamy says wishes to tn peoples
நாளை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு முதல்வர் உலக தமிழர்கள் அனைவரும் வாழ்த்து மடல் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அவர் குறிப்பிட்டுள்ள செய்திகள் பின்வருமாறு :-
திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் எனது அன்புக்குரிய தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழனென்ற பெருமையோடு தலை நிமிர்ந்து நில்லடா!
தரணி யெங்கும் இணையிலா உன் சரிதை கொண்டு செல்லடா! என்ற நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் பாடல் வரிகளுக்கேற்ப, ஈடில்லா பெருமைமிக்க வரலாற்றை கொண்ட தமிழ் பெருமக்கள், சித்திரைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக பன்னெடுங்காலமாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.
இந்த இனிய புத்தாண்டு, தமிழர்களின் வாழ்வில் புதிய எழுச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, உலகெங்கும் வாழும் தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளப்பூர்வமான தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று அதில் தெரிவித்துள்ளார்.
English Summary
edapadi palanisamy says wishes to tn peoples