மக்களுக்கு இன்றுவரை புரியாத புதிராய் இருக்கும் சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் வீடியோ!. - Seithipunal
Seithipunal



ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். மக்கள் மத்தியில் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ள சசிகலா முதல்வராக பதவியேற்க வசதியாக பன்னீர்செல்வம் பதவியை விட்டுக்கொடுத்தார்.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து முதல்வர் பதவி ஏற்ற ஓ.பன்னீர்செல்வம் நேரடி டெல்லி தொடர்புகளால் வலுப்பெற ஆரம்பித்தார். இதற்கு முடிவுகட்ட நினைத்த சசிகலா, தானே முதல்வர் ஆக திட்டமிட்டார். 

                

இதனையடுத்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூடி சசிகலாவை சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு செய்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் சிறை செல்ல நேர்ந்தது.

இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனால் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியில் அமர்த்திவிட்டு சிறை சென்றார் சசிகலா. 

அதற்கு பின்னர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்து, கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக சசிகலாவால் நியமிக்கப்பட்ட டிடிவி தினகரனை வெளியேற்றினர்.

தற்போது வரை முதல்வர் பதவியில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர் மற்றும் கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவியையும் வகித்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜெயலலிதாவுக்கு கொடுத்த அதே மரியாதையை சசிகலாவுக்கு கொடுத்துவந்தார். அந்த வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் அந்த வீடியோ இன்றுவரை மக்களுக்கு புரியாத புதிராய் இருந்துவருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edapadi palani sami and sasikala video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->