'கோபம் உள்ள இடத்தில் தான் குணமிருக்கும்' கார்த்தி சிதம்பரத்தை எதிர்த்து எச்.ராஜாவிற்கு ஆதரவாக களமிறங்கிய எடப்பாடி!!   - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபை இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஆகியவற்றை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் அவரவர் விருப்பப்படி கூட்டணி அமைத்து இந்த தேர்தலை எதிர்கொள்ளவுள்ளனர். 

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜாவிற்கு சிவகங்கை பாராளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

Image result for h.raja seithipunal

அவருக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிவகங்கை தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, "  "எச். ராஜா கோபக்காரர் தான். கோபம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும். மேலும், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தேர்தல் ஜூரம் வந்து விட்டது.

என்ன பேசுவது என்று தெரியாமல் பேசி கொண்டிருக்கிறார். தூங்கி கொண்டிருக்கும் ஸ்டாலினை எழுப்பினால் கூட என்னை திட்டிக்கொண்டேதான் எழுந்திருப்பார்" என கூறியுள்ளார். 

Image result for karthi chidambaram seithipunal

மேலும், 'இந்த தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். தந்தையே ஒன்றும் செய்யாத போது மகன் மக்களுக்கு கார்த்தி சிதம்பரம் என்ன செய்யப்போகிறார்⁉" என்று கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edapadi campaign with H.raja in sivakangai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->