எடப்பாடி கேட்ட அந்த ஒரு கேள்விக்கு பதில் கூற முடியாமல் தவித்த செய்தியாளர்கள்!! ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு பா!!  - Seithipunal
Seithipunal


தேமுதிக கூட்டணி முடிவுகளை வெளியிட தாமதப்படுத்திய சூழ்நிலையில் பல்வேறு தரப்பினரும், வதந்திகளை பரப்பியவாறு இருந்தனர். அனைத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்பொழுது அதிமுகவுடனான கூட்டணியை தேமுதிக உறுதி செய்யுள்ளது.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி அவர்களிடம், நேற்று செய்தியாளர்கள், " அதிமுகவை எதிர்த்து விஜயகாந்த் சட்டசபையில் குரலெழுப்பினார். இருப்பினும் அதிமுக எப்படி தேமுதிகவுடன் கூட்டணி வைத்தது?" என கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, " திமுகவை வைகோவை விட யாரும் மோசமாக விமர்சிக்க முடியாது. அந்தளவு கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி மிக மிக தீவிரமாக திமுகவையும், ஸ்டாலினையும் வைகோ விமர்சித்துள்ளார். 

8 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவத்தை கேட்கும் நீங்கள் , இதே போல் என் வைகோவிடம் கேட்பதில்லை? வைகோ இன்று ஸ்டாலினை அனைத்து மேடைகளிலும் புகழ்ந்து வருகிறார். 

ஆனால், அவரிடம் போய் எந்த செய்தியாளரும் இவ்வாறு கேட்பதில்லையே? ஸ்டாலினிடமோ அல்லது வைகோவிடமோ சென்று, 'அன்று இப்படி கீழ்த்தரமாக விமர்சித்துவிட்டு இன்று கூட்டணி வைத்துள்ளீர்களே ஏன்?' என கேட்டிருக்கலாமே! " என கேட்டுள்ளார். 

ஆனால், அதற்கு செய்தியாளர்கள் பதில் கூற முடியாமல் வாயடைத்து போயுள்ளதாக தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edapadi asked one question to media


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->