உனக்கு மட்டும் இனி காசு கம்மி .,மின்சாரம் கணக்கெடுக்கும்போது முத்தமிட்டு இளம்பெண்ணை கணக்கு செய்த அதிகாரி.! வெளியான அதிர்ச்சி தகவல் .! - Seithipunal
Seithipunal


மின்சாரம் கணக்கெடுக்க சென்ற அரசு ஊழியர் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள கள்ளிக்குடி கிராமத்தில் மின்வாரிய அலுவலக கணக்கீட்டு ஊழியராக ஜெயராமன் என்பவர்  வேலை செய்து வருகிறார். 

eb officer in tamilnadu க்கான பட முடிவு
 
இவர் சமீபத்தில்  மன்னார்குடியில் உள்ள ஒருவரின் வீட்டிற்கு சென்று மின் கட்டண அளவை கணக்கு எடுத்தார்.பின் வீட்டிற்குள் சென்ற ஜெயராமன் அந்த வீட்டில் உள்ள பெண்ணிடம் இனிமேல் உங்களுக்கு மட்டும் மிகவும் குறைவாகவே மின் தொகை போட்டுத்தருவேன் எனவும் தவறான முறையிலும் பேசியுள்ளார்.

ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த அப்பெண் அதெல்லாம் தேவையில்லை ,சரியான தொகையை பதிவு செய்யும்படி கூறியுள்ளார்.

sex abuse க்கான பட முடிவு
 
அப்போது அவர் திடீரென அந்த பெண்ணை அணைத்து முத்தம் கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அவரை வீட்டிற்கு வெளியே தள்ளிவிட்டு,உடனடியாக தனது கணவருக்கு தகவல் கொடுத்தார்.
 
இதையடுத்து, மன்னார்குடி காவல் நிலையத்தில் அப்பெண்ணின் கணவர் புகார் கொடுத்தார். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகவுள்ள அவரை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eb officer misbehave with the woman


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->