இட்லி சாப்பிடும் போட்டியில் 32 இட்லிகளைத் தின்று முதல் பரிசை வென்ற இளைஞர்…! சுவராசியமான பொங்கல் போட்டி….!
eating idlies competition
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள பல்வேறு ஊர்களில், பல விதமான விளையாட்டு போட்டிகள் நடத்தப் பட்டன. சிறுவர் முதல் பெரியர் வரை உற்சாகமாக இந்த போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றனர்.
கரூர் மாவட்டம் வேம்பாம்பாளையத்தில் உள்ள வேம்பு இளைஞர் நற்பணி மன்றம், 23-வது ஆண்டாக, பொங்கல் விளையாட்டுப் போட்டிகளை நடத்தியது.
கபடி, சைக்கிள் பந்தயம், மியூசிகல் சேர், உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெற்றது.
இறுதியாக, வெகு சுவராசியமான இட்லி சாப்பிடும் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் 10 பேர் பங்கேற்றனர். அவர்களில் 22 வயதான சுரேஷ் என்ற உள்ளுர் வாலிபர் 32 இட்லிகளைச் சாப்பிட்டு முதல் பரிசைத் தட்டிச் சென்றார். இவரை அடுத்து, 29 இட்லிகள், 27 இட்லிகள், 25 இட்லிகளைச் சாப்பிட்டவர்களுக்கும் பரிசுகள் வழங்கப் பட்டன.
English Summary
eating idlies competition