வேலூர் அருகில் உள்ள பேரணாம்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் வீடுகளில் உள்ள சுவர்கள் விரிசல் உண்டானது.
பேரணாம்பட்டு பஜார்வீதி, டிப்புசாதெரு, ஏரிகுத்திமேடு, காமராஜர் நகர், மதனிதெரு,, லால்மசூதிதெரு, ஒத்தவாடை தெரு தரைக்காடு,திரு.வி.க.நகர் பகுதியில் இன்று காலை 2 முறை நில அதிர்வு ஏற்பட்டது. லேசான அதிர்வு தான் முதலில் உணரப்பட்டது,ஆனால் இரண்டாவது முறை அதிக சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டது.
வீடுகளில் பாத்திரங்கள் உருண்டதால் மக்கள் பீதி அடைந்தனர். இதனால் மக்கள் அச்சப்பட்டு எல்லோரும் வீடுகளை விட்டு வெளியேறினர். இதனால்வீ சிலர் வீட்டிலுள்ள சுவற்றில் விரிசல் உண்டானது. பேரணாம்பட்டு தாசில்தார் மகாலிங்கம் நிலநடுக்கம் உணரப்பட பகுதி மக்களிடம் விசாரணை செய்தார்.