முத்தரையரின் பெயரை திருச்சி விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும்!! மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்!! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதி நாளில் தமிழ்மொழி குறித்த விவாதங்கள் நடைபெற்றது. இதில் தமிழுக்காக உழைத்த சான்றோர்களுக்கு, மணிமண்டபம் கட்டப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் விதி எண் 110 இன் கீழ் அறிவித்தார். 

அதன்படி, பெரும்பிடுகு முத்தரையர் போன்ற தலைவர்களுக்கு சிலையும், மணிமண்டபமும் அமைக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை வரவேற்கும் விதமாக பாமக நிறுவனர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். 


வீரத்தின் விளைநிலமாகவும், தமிழுக்கு தொண்டனாகவும் திகழ்ந்த மாமன்னன் பெரும்பிடுகு முத்தரையருக்கு திருச்சி மாவட்டத்தில் உருவச்சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு சிறப்பானது. திருச்சி விமான நிலையத்திற்கு அவர் பெயரைச் சூட்டவும் நடவடிக்கை தேவை" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss says about mutharaiyar statue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->