திமுக, கூட்டணி கட்சிகள் ஓட்டுக்கேட்டு வரவேண்டாம்.,நோட்டிஸ் ஒட்டிய ஊர்மக்கள்!! வெளியான அதிர்ச்சி காரணம்!!
Dont campaign DMK party in our area
சில நாட்களுக்கு முன்பு அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து நாடுமுழுதும் போராட்டங்களும், எதிர்ப்புகளும் கிளம்பியது.
இருப்பினும், கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசு இளம்பெண்களை கோவிலுக்குள் அனுப்ப ஆர்வம் காட்டியது. இந்த சம்பவம் ஐயப்ப பக்தர்களிடையே கோபத்தை கிளப்பியது. இதனால், சில பொதுமக்களும், ஐயப்ப பக்தர்களும், மேலும் சில இளம்பெண்களும் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், அய்யப்பன் பக்தர்கள் பலர் இந்து மதத்தை தீவிரமாக எதிர்த்து வரும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டோம் என விருதுநகர் அய்யனார் நகரில் போஸ்டர் அடித்து தங்கள் வீடுகளில் நோட்டிஸ் ஒட்டியுள்ளனர்.
மேலும், "எங்கள் வீட்டில் அனைவரும் இந்து மதக்கடவுள்களை கும்பிடுபவர்கள், இந்து மத விரோதியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், இங்கு ஓட்டு கேட்டு வரவேண்டாம் என போஸ்டர் அடித்து இனி அனைத்து வீடுகளிலும் ஓட்டுவோம்' என கூறியுள்ளனர்.
English Summary
Dont campaign DMK party in our area