குழந்தையை நாய்கள் சாப்பிட வீசி சென்ற கொடூர சம்பவம்!
புதருக்குள் வீசப்பட்ட ஆறு மாத ஆண் குழந்தையை நாய்கள் கடித்து சாப்பிட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் பிறந்த ஆண் குழந்தையை யாரோ ஒருவர், புதருக்குள் வீசி சென்றுள்ளார். இந்த குழந்தையின் கை, கால்களை நாய்கள் கடித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தது, இதனைப்பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் காவல் துறைக்கு புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை வீசிசென்றவர் குறித்து போலீசார் தேடி வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் கூறுகையில் கொடுரமாக புதருக்குள் வீசிய கல்நெஞ்சக்காரனை விரைவில் கைதுசெய்யவேண்டும். இச்சம்பவம் இந்த பகுதிமக்களுக்கு பெரும் துக்கமாக உள்ளது எனவும் கூறினர்.