திருடனைப் பிடிக்கத் தான் நாய் வளர்ப்பாங்க..! ஆனா இங்கே அந்த நாய்களையே திருடிட்டு போயிருக்காங்க..!
தேனி மாவட்டம் வத்தலக்குண்டில், பெரியகுளம் சாலையில், ஈடன் கார்டன் கண்மாய் அருகே, முனியப்பன் என்பவர் சேவல் பண்ணை வைத்துள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள செம்மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் இவர்.
இவர் சேவல் பண்ணையை நீண்ட காலமாக நடத்தி வருகிறார். சேவல் பண்ணை பெரிய அளவில் இருந்ததால், அதனைக் கண்காணிப்பதற்கு, சேவல் பண்ணை அமைந்துள்ள தோட்ட வளாகத்தில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி உள்ளார்.
காவலுக்கு, உயர் சாதி ரகங்களான, ஜெர்மன் செப்பர்டு, மற்றும் பொமேரியன் என்ற இரண்டு, உயர்ந்த ரக நாய்களை காவலுக்கு வைத்திருந்தார்.
இந்த இரண்டு நாய்களும், சேவல் பண்ணை அமைந்திருந்த, வளாகத்தில் இருந்தன. நேற்று முன் தினம் இரவில், சில மர்ம நபர்கள், இந்த சேவல் பண்ணையின் ஓட்டைப் பிரித்து, உள்ளே நுழைந்துள்ளனர்.
உடனே, இவர்களைப் பார்த்து, அந்த நாய்கள் குரைத்துள்ளன. உடனே, அவர்கள், தங்கள் கையில் வைத்திருந்த மயக்க மருந்து பாட்டிலில் ஸ்பிரேயை அடித்துள்ளனர்.
அதனால், உடனே நாய்கள் மயங்கி விட்டன. உடனே, அவர்கள் அந்த இரண்டு, உயர் ரக நாய்களையும் சாக்கில் போட்டுக் கொண்டு, வெளியேறிச் சென்று விட்டனர்.
மறு நாள், சேவல் பண்ணைக்குச் சென்ற, முனியப்பன், நாய்கள் திருடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறி்த்து, வத்தலக்குண்டு போலீசில் புகார் அளித்தார். சிசடிவி கேமரா பதிவுகளை வைத்து, நாயைத் திருடியவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
English Summary
Dogs are Stolen Police Complaint Register