உச்ச கட்ட மகிழ்ச்சியில் மருத்துவர்கள்.! தமிழக அரசின் புதிய அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை  வயதை உயர்த்த தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது நடைமுறையில், அரசு மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது  58. இதை 65 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்புப்படி, அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 65 ஆகும். மற்ற பல மாநிலங்களில் அரசு மருத்துவர்களின் ஓய்வு வயது 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து,  தமிழகத்திலும்  மருத்துவர்களின் ஓய்வு வயதை 58-லிருந்து இருந்து 65 ஆக உயர்த்தக்கோரி மருத்துவ பேராசிரியர் ஒருவர் வழக்கு தொடர்ந்து இருந்தார் . இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆஷா அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது மனுதாரர், மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல, தமிழ்நாட்டிலும் மருத்துவர்களின் ஒய்வு வயதை 65 ஆக உயர்த்த வேண்டும்.  மருத்துவர்களின்  ஓய்வு வயதை உயர்த்தினால் 800 அரசு மருத்துவர்கள் பயனடைவார்கள் என நீதிபதியிடம் முறையிட்டார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்கும்படி தமிழக சுகாதாரத் துறை செயலர்,மருத்துவ கல்வி இயக்குனருக்கு உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Doctor Retire Age Relaxation High Court Judgement


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->