ஜெயலலிதா இறப்பிற்கு திமுகவினர் தான் காரணம்!! போட்டு உடைத்த தம்பிதுரை!! ஆவேசத்தில் திமுகவினர்!!
dmk who reason for jeyalalitha death
கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, "பாராளுமன்ற தேர்தலில் அதிமுக முக்கிய பங்காற்றும் என்பது தவிர்க்க இயலாதது. மேலும், கூட்டணி குறித்து அதிமுக தலைமை தான் முடிவு செய்யும். இனி தமிழகத்தில் பாஜகவோ, காங்கிரஸோ கனவில் கூட தமிழகத்தில் காலூன்ற முடியாது என்றும்,
கஜா புயல் பற்றி பாராளுமன்றத்தில் எடுத்துரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அப்போது, கஜா நிவாரண பொருட்கள் தமிழகத்திற்கு கிடைக்கும் படி ஏற்பாடு செய்யப்படும். மேலும், ஜெயலலிதா இறப்பிற்கு திமுக தான் காரணம். திமுகவினர் தான் ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்து அவரை பெங்களூர் சிறையில் அடைத்தனர்.
பின் அவ்வழக்கில் வெற்றி கண்டு ஜெயலலிதா அவர்கள் வெளிவந்தார். இருந்தபோதும், மீண்டும் அவ்வழக்கில் மேல்முறையீடு செய்து, அவரை சிறையில் அடைத்தனர். இது மன்னிக்க கூடிய செயல் இல்லை. இதற்கெல்லாம் சேர்த்து வருகிற தேர்தலில் தக்க பதிலடி கொடுப்போம்.' என்றும் ஆவேசமாக கூறியுள்ளார்.
English Summary
dmk who reason for jeyalalitha death