திமுகவிற்கு எதிரி வெளியில் இல்லை, கட்சிக்குள்ளே தான் இருக்காங்க! ஸ்டாலினை வெறுப்பேற்றிய திமுகவினர்!!
DMK supportes banner
திருவாரூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைந்த பிறகு, அந்த தொகுதியில் இடைத் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்தன. பின்னர் கஜா புயலை காரணம் காட்டி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
அந்த சமயத்தில் திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் சார்பாக விருப்பமனு தாக்கல் செய்யப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் சார்பாக கொடுத்த வேட்புமனுவில் தவறுதலாக சில விஷயங்களை பதிவிட்டுருந்தனர். அதாவது அவர் திமுகவில் எப்பொழுது உறுப்பினர் ஆனார் என்ற கேள்விக்கும், அவரது பிறந்த வருடத்திற்கும் ஒரே வருடத்தை பதிலாக அளித்துள்ளனர்.
மேலும், அந்த வேட்பு மனுவில் அவர் எந்தெந்த போராட்டத்தில் கலந்துகொண்டார் என்றதற்கு அனைத்து போராட்டமும் என்பதனை பதிவு செய்திருந்தனர். இது மக்களிடையே சிரிப்பையும், அதிர்ச்சியையும் உருவாக்கும் விதமாக இருந்தது. அந்த வேட்புமனுவின் புகைப்படமும் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வந்தது.
பொதுவாக திமுகவில் கட்சியின் தொண்டர்கள் செய்யும் சில விஷயங்கள் ஸ்டாலின் அவர்களை வெறுப்பேற்றும் விஷயமாக அமைந்து வருகிறது. சமீபத்தில் பிரியாணி கடையில் பிரியாணிக்காக போட்ட சண்டை, அழகுநிலையத்தில் பெண்ணுடன் கைகலப்பு, திருமயம் கோவிலில் பெண்களை தாக்கியது உள்ளிட்ட சில சம்பவங்கள் ஸ்டாலினை வெறுப்பேற்றியது.
தஹ்ரபோது, கரூர் மாவட்டத்தில் திமுகவினர் வைத்த பேனரில் அரசியல் வாரிசாக, ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி, அதற்கு அடுத்து உதயநிதியின் மகன் என்று தெரிவிக்கும் வகையில் பேனரை வைத்து திமுக தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.