திமுக சேர்ந்த முக்கிய நபரை, 5 பேர் கொண்ட முகமூடி கும்பல் வெட்டி கொலை..!! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள எஸ். பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன். விவசாயத் தொழில் செய்து வருகிறார். தவிர, திமுக ஊராட்சிக் கழக அவைத் தலைவராக உள்ளார்.

இவரது மனைவியின் பெயர் பேச்சியம்மாள் (வயது 50), மகன் சசிக்குமார் (வயது 14), மகள் சிவசந்தியா (வயது 13). இவர்கள் அனைவரும், குடும்பத்துடன், ஊரின் எல்லையான, வீரக்கல் ரோடு சந்திப்பு அருகே ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர்.

நேற்று அதிகாலை, 2 மணி அளவில், வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த மாரியப்பன், சிறுநீர் கழிப்பதற்காக, வெளியே வந்தார்.

அப்போது, வாசலில், 5 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று, முகமூடி அணிந்து கொண்டு, மாரியப்பனைத் தங்கள் வசம் வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்களால்  தாக்கினா்.

இதனால், மாரியப்பன் நிலை குலைந்து கீழே விழுந்தார். உடனே, வீட்டிற்குள் சென்ற அந்தக் கும்பல், மாரியப்பன் மனைவி பேச்சியம்மாளையும் தாக்கத் துவங்கினா்.

இதனால், பேச்சியம்மாள், கத்தி கூச்சல் போட்டார். அவரின்  சத்தம் கேட்டு, மற்றொரு அறையில் துாங்கிக் கொண்டிருந்த, சிறுவர்களான இவர்களது பிள்ளைகள், எழுந்து வந்து, முகமூடி அணிந்தவர்களைக் கண்டு, கத்தி கூப்பாடு போட்டனர்.

இதனால், சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், ஓடி வந்தனர். ஆட்கள் வருவதை அறிந்ததும், அந்த முகமூடிக் கும்பல் தப்பி ஓடி விட்டது.

அவர்கள், மாரியப்பனின் வீட்டில் ஏதும் திருடவில்லை, என்பது குறிப்பிடத் தக்கது. பின் எதற்காக, மாரியப்பன் வீட்டிற்குள் புகுந்து தாக்கினார்கள்? என்று, மாரியப்பன் அளித்த புகாரின் அடிப்படையில், செம்பட்டி போலிசார் விசாரணை செய்து, அந்த முகமூடிக் கும்பலைத் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Mariyappan kill Use knife and scythe


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->