திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக வேட்புமனுத்தாக்கல்!! ஊர்வலமாக சென்ற வேட்பாளர்!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர். இதன் காரணமாக 4 தொகுதி இடைத்தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. 

இன்னும் 3 நாட்களில் வேட்பாளர்களை அறிவித்த அனைத்து கட்சிகளும் பிரசாரத்தை தொடங்க உள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய 29ம் தேதியே கடைசி நாள் என்கிற நிலையில், இன்று திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சரவணன் ஊர்வலமாக சென்றுள்ளார்.

பின்னர், திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவர் 2வது முறையாக திருப்பரங்குன்றம் தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dmk candidate nomination in thiruparangunram


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->