'ஆரத்தி எடுத்தா வெட்டுறாங்க..' ரவுடிகளின் கூடாரமாகும் திமுக.. பதிலடியை அறிவித்த அதிமுக அமைச்சர்..!
dmk attack every political meeting
ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் திருப்பாலக்குடியில் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வாக்கு சேகரிக்க சென்றார்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமிய தொண்டர்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அதே பகுதியை சேர்ந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் மற்றும் தி.மு.க.வினர் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்த இஸ்லாமிய தொண்டர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தினர்.
அரிவாளால் வெட்டியதில் கழகத் தொண்டர் பாய்ஸ் என்ற முகமது யாசின் படுகாயம் அடைந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று எதிர்க்கட்சியினரின் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் முகமது யாசினை சந்தித்து நலம் விசாரித்தார்.
இது குறித்து பேசிய அமைச்சர், தோல்வி பயம் உறுதியாகிவிட்ட நிலையில் திமுகவினரும், எதிர்க்கட்சியினரும் திட்டமிட்டு வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக ஒரு வன்முறை கட்சி இவர்களோடு கூட்டணி வைத்துள்ளவர்கள் ரவுடிகள்.
இவர்களுக்கு ஒரு போதும் நாங்கள் அஞ்ச மாட்டோம். நாங்கள் அமைதியாக இருக்கிறோம். மீண்டும் மீண்டும் எங்கள் கழக தொண்டர்களை தாக்குகின்றனர்.
எங்களின் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு. எங்களை மேலும் சீண்டினால் தக்க பதிலடி கொடுப்போம்' என்று தெரிவித்துள்ளார்.
English Summary
dmk attack every political meeting