ஸ்டாலினை அசிங்க படுத்தவே துரைமுருகன் திமுகவில் உள்ளார்?! பிரேமலதா போட்டுடைத்த கூட்டணி உண்மைகள்!!
Dmdk treasurer premaladha says about Dmk
ஸ்டாலின் உறங்குகிறார் என துரைமுருகன் கூறுவது அவரை கேவலப்படுத்த தானா? என தேமுதிக பொருளாளர் பிரேமலதா கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக தேமுதிகவின் துணை பொதுச்செயலாளர் எல் கே சுதீஷ் தெரிவிக்கையில், ''துரைமுருகன் தனது திமுக தலைமை பற்றி மிகவும் மோசமாக விமர்சித்தார். அதையெல்லாம் நான் வெளியில் கூறவா? ஆனால், நாங்கள் அப்படி கூற மாட்டோம்.
ஏனென்றால், எங்களது வளர்ப்பு அப்படி இல்லை. துரைமுருகன் இருக்கும் இடமும், அவரது வளர்ப்பும் தான் இவாறு தரம் தாழ்ந்து பேச வைக்கிறது." என மிகவும் ஆவேசமாக பேசினார்.
அதே போல் இன்று பிரேமலதாவும், "துரைமுருகனிடம் கேள்வி எழுப்பினோம் என்றால் ஸ்டாலின் உறங்குகிறார் என கூறுகிறார். ஒரு தலைவர் பகல் ஒரு மணிக்கு அரசியல் பரபரப்பான சூழ்நிலையில் உறங்குகிறார் என கூறுவது ஸ்டாலினை அவமதிக்கும் விதமாக தானே இருக்கிறது.
முறையான பதிலை அவர் அளித்தாரா? இது ஒரு மூத்த அரசியல்வாதிக்கு அழகா? அரசியல் லாபத்திற்காக தேமுதிகவினை சிதைக்க துரைமுருகன் போட்ட சதித்திட்டம் தற்பொழுது அம்பலாமாகியுள்ளது.
இது திமுகவிற்கு புதிதல்ல. திமுக தில்லு முள்ளு கட்சி. அது திருட்டு கட்சி. என்பதை அறியாதவர்களா நாங்கள்? ஸ்டாலினை சட்டையை கிழித்து வரவழைத்தது என துரைமுருகன் ஸ்டாலினிற்கு எதிராகவே செயல்படுகிறார் என நினைக்க தோன்றுகிறது " என கூறியுள்ளார்.
English Summary
Dmdk treasurer premaladha says about Dmk