தீபாவளிக்கு ஊருக்கு செல்வோர் கவனத்திற்கு.. இன்று ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பொங்கல் போன்ற முக்கிய பண்டிகை தினங்களில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இதனால் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் அதிக அளவில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

இதில் ரயில்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க 4 மாதங்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டு தீபாவளி வரும் நவம்பர் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் பயணிளுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு ரயில்வே கவுண்டர்கள் மற்றும் ஐஆர்சிடிசி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அதன்படி, இன்று முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 9ம் தேதியும், ஜூலை 13ம் தேதி முன்பதிவு செய்தால் நவம்பர் 10ஆம் தேதியும், ஜூலை 14ம் தேதி முன்பதிவு செய்தால் நவம்பர் 11ஆம் தேதியும், ஜூலை 15ம் தேதி முன்பதிவு செய்தால் நவம்பர் 12ம் தேதியும் பயணிக்க முடியும்.

அதேபோல் தீபாவளி முடிந்து பணியிடங்களுக்கு திரும்புவதற்கு வசதியாக வரும் ஜூலை 16, 17 மற்றும் 18ஆம் தேதிகளில் முன்பதிவு செய்தால் முறையே நவம்பர் 13, 14 மற்றும் 15 தேதிகளில் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Diwali train ticket booking from today


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->