தமிழ்நாட்டில் இப்படி ஒரு காவல்துறை அதிகாரியா! சுத்தமாகும் மாவட்டம்! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் தென் கோடி எல்லையான கன்னியாகுமரி மாவட்டத்தில் எஸ்.பி-யாகப் பணி புரிந்து வரும், ஸ்ரீநாத், நேர்மைக்குப் பெயர் போனவர். சமீப காலமாக, கன்யாகுமரி மாவட்டத்தில், உள்ள காவல் நிலையங்களில் எல்லாம், லஞ்சம், தலை விரித்தாடுவதைக் கண்டு பிடித்து விட்டார்.

எந்தெந்த ஸ்டேசனில்,யார் யார் எவ்வளவு லஞ்சம் வாங்கினார்கள்? யாரிடம், எதற்காக வாங்கினார்கள்? போன்ற விபரங்களை எல்லாம் சேகரிக்கத் துவங்கி உள்ளார், எஸ்.பி. அந்த லஞ்ச இன்ஸ்பெக்டர்களின் பெயர்களை எல்லாம், பட்டியல் இட்டு, டி.ஐ.ஜி-க்கு அனுப்பி உள்ளார். அவர்களை எல்லாம், உடனடியாக, கன்யாகுமரி மாவட்டத்தை விட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கையையும் எடுத்துள்ளார்.

இதைக் கண்டு, அந்த இன்ஸ்பெக்டர்கள் எல்லாம் ஆடிப் போய் இருக்கிறார்கள். இந்த மாதிரியான இன்ஸ்பெக்டர்களின் நடவடிக்கையால், குமரி மாவட்ட மக்களிடம் இருந்த நற்பெயர் பறிபோனதை எண்ணி வேதனைப் படுகிறார்.     இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, இன்ஸ்பெக்டர் மற்றும், டி.எஸ்.பி-க்களிடம் மட்டும் போனில் பேசி வந்த ஸ்ரீநாத் தற்போது, எஸ்.பி. ஏட்டுகளிடம் பேசி வருகிறார்.

எஸ்.பி-யே தங்களிடம் ஆலேசனை கேட்பதைப் பார்த்து, மகிழ்ந்த அந்த ஏட்டுக்கள், காவல் துறையில் நடைபெறும் சீர்கேடுகளை எல்லாம், தயங்காமல் கூறி வருகிறார்கள். இதனால், குமரி மாவட்டம், புனர் ஜென்மம் எடுக்கும், என்று மக்கள் நம்புகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

district sp clean the corruption in his district


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->