அரசு மருத்துவமனையில் ஆபரேஷன் செய்துகொண்ட கலெக்டர்: குவியும் பாராட்டுகள்.!! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்ட கலெக்டராக லெட்சுமிபிரியா பணியாற்றி வருகிறார். இந்நிலையில்., நேற்று முன்தினம் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. தன்னை அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கலெக்டர் லெட்சுமிபிரியா கூறியுள்ளார். 

இதனையடுத்து கலெக்டர் லெட்சுமி பிரியாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு குடல் வால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

கலெக்டர் தனக்கு அரசு மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை செய்யும்படி கேட்டு கொண்டார். அதன்படி அவருக்கு அரியலூர் அரசு மருத்துவ மனையில் நேற்று இரவு குடல்வால் அறுவை சிகிச்சை நடைபெற்றது.

வழக்கமாக கலெக்டராக இருப்பவர்கள் தனியார் மருத்துவமனையில்தான் சிகிச்சை பெறுவார்கள். ஆனால்., கலெக்டர் லெட்சுமி பிரியா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைன் பெறாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டுள்ளதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ariyalur collector laxmi piriya


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->