வடமதுரையில் பரபரப்பு.!! வண்டிகருப்பண்ணசாமி கோவில் அறங்காவலர் கடத்தல்.!! பதட்டத்தில் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரையில் வண்டிகருப்பண்ணசாமி கோவிலானது உள்ளது. இந்த கோவிலானது மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் என்பதால்., புதிய வாகனங்களை வாங்கியவர்கள் கோவிலுக்கு வாகனத்தை கொண்டு வந்து பூஜை செய்து எடுத்து செல்வது வழக்கம்.

இந்த கோவிலுக்கு பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்லும் நிலையில்., இந்த கோவிலின் அறங்காவலராக ரெங்கநாதன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருடைய சொந்த ஊர் அயலூருக்கு அருகில் உள்ளதங்கமாபாடி என்பதால் தினமும் கோவிலுக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். 

இந்நிலையில்., சம்பவத்தன்று கோவிலின் எதிர்புறம் உள்ள உணவகத்தில் சாப்பிட்டு விட்டு., உணவவகத்தின் வெளியே அமர்ந்திருந்த போது அங்கிருந்த கும்பல் அவரை திடீரென காருக்குள் இழுத்து போட்டு திரைப்பட பாணியில் கடத்தி சென்றது.  

இந்த சம்பவத்தை அங்கிருந்த மக்கள் கவனிக்காததை அறிந்த கும்பல் உடனடியாக சம்பவ இடத்தை விட்டு கிளம்பினார்., கோவில் அறங்காவலரை சிறிது நேரத்தில் தேடிய அலுவலர்கள் அவரை காணாததால் அதிர்ச்சியடைந்தனர். மேலும்., அங்குள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை அலுவலர்கள் சோதித்த போது அவர் கடத்தப்பட்ட சம்பவம் அவர்களுக்கு தெரிய வந்தது. 

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் இது தொடர்பான வீடியோ காட்சிகளை உடனடியாக இணையத்தளத்தில் பதிவேற்றினர்., மேலும்., இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சனை இருந்து வந்தது தெரியவந்தது. 

அவரை கடத்தி சென்றவர்கள் யார்? எதற்காக கடத்தி சென்றனர்? என்பது குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்., அந்த காட்சி பதிவில் பெண் காவலதிகாரி ஒருவரின் உருவம் பதிவாகி இருப்பதன் காரணமாக அங்குள்ள பலருக்கும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும்., அவருக்கும் மனைவி - மக்கள் என்று யாரும் இல்லாததால் தற்போது வரை காவல் நிலையத்தில் புகார் ஏதும் அளிக்கப்படாததும் அந்த பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் பரபரப்பையும்., அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dindukal temple officer kidnapped vandi karupannasamy kovil


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->