ரெய்டு பீதி... அணிமாறும் அதிமுக பிரபலம்..? தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சி நடைபெறுவதற்கான ஒத்திகை..? - Seithipunal
Seithipunal


'சசிகலா குடும்பத்துக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தவே வருமானவரிச் சோதனை என்கிற நெருக்கடியை மத்திய அரசு கொடுக்கிறது.

தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சி நடைபெறுவதற்கான ஒத்திகை நடக்கிறதோ என்று மக்கள் கருதுகின்றனர்.

இந்த நிலையில் அதிமுக தினகரன் அணியை சேர்ந்த புகழேந்தி அணி மாறப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், டி.டி.வி தினகரன் வழியில் பயணம் நில்லாமல் தொடரும். இந்த வார்த்தைகளில் எந்த மாற்றமும் இல்லை. அணி மாற்றம்கனவிலும் நடக்காது.

ரெய்டுகள் வந்ததற்காக அணி மாறப் போகிறார்கள் என்ற வதந்தியை வாட்ஸ்அப்பில் கிளப்பி விட்டிருக்கிறார்கள்.

நான் முதலமைச்சரைச் சந்திக்கக் கோட்டைக்குக் கிளம்பியே விட்டதாக அந்த வாட்ஸ்அப் செய்தி சொல்கிறது.

மாண்புமிகு அம்மா முதன்முதலில் 21 நாள்கள் கர்நாடகச் சிறையில் இருந்தபோது, தமிழகத்தில் இருந்துவந்த தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளை அங்கு நான்தான் தங்கவைத்தேன்.

இதற்காக நூற்றுக்கணக்கில் அறைகளை வாடகைக்கு எடுத்தேன். இந்தச் செலவினங்களுக்காக அம்மாவிடமோ, சின்னம்மாவிடமோ, டி.டி.வி-யிடமோ ஒரு ரூபாய்கூட கைநீட்டி வாங்கவில்லை. இன்றுவரை அப்படியேதான் இருக்கிறேன்.

தொடர்ந்து இப்படி அவதூறு பரப்புகிறவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

கட்சிக்குப் பாடுபட்ட சில முக்கியமான நபர்களுக்கு டி.டி.வி., இதுவரை உரிய பொறுப்புகளை வழங்கவில்லை என்ற வருத்தம் எனக்கும் இருக்கிறது.

இருந்த போதிலும் எங்கள் குடும்ப பிரச்சனைக்காக நாங்கள் மாற்றானை தேடி போக மாட்டோம். முதல்வர் வீட்டிலும், துணை முதல்வர் வீட்டிலும் சோதனை நடந்தால் ஒரு மணி நேரம் கூட ஆட்சி நீடிக்காது' என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dinakaran supporter says ops confused speech


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->