நாங்கள் இரட்டை இலையை கேட்கவில்லை.,வாதிட காரணம் இது தான்!! தினகரன் அதிரடி!!
dhinakaran says we dont want irattai ilai
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, " அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இரட்டை இலையை கேட்கவில்லை. அவர்கள் போர்ஜரி செய்துள்ளனர் என்பதே எங்கள் வாதமாக இருக்கிறது.
குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு தான் ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றோம். திமுகவை டெபாசிட் இழக்க செய்தோம். ஒரு பஸ்சில் ஏறி மறுபஸ்சில் வருபவர்களுக்கு இங்கு இடம் இல்லை. மேலும், நாங்கள் கூட்டணி செல்ல விரும்பவில்லை.
எங்கள் கட்சியில் இருந்து விட்டு வேறு கட்சிகளுக்கு போனவர்களைப்பற்றி எங்களுக்கு சிறிதும் கவலை இல்லை. தொண்டர்களும் மக்களும் எங்களுடன் இருக்கிறார்கள்.
நாங்கள் சிறிய கட்சி தான். திமுக ஒரு பயில்வான்கூட்டணி. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு அத்தியாயம் படைக்க இருக்கிறோம்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியில் நாங்கள் போட்டியிடுவோம். நிச்சயமாக இதில் 37 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்
மோடி அதிமுகவின் பொதுச்செயலாளாராக மாறிவிட்டார். அதிமுகவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓ.பி.எஸ். விரைவில் பா.ஜ.க.வுக்கு சென்று விடுவார்" என தினகரன் கூறியுள்ளார். இவ்வாறு ஓபிஎஸ் கட்சி மாறிடுவார் என தினகரன் கூறியிருப்பது அதிமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
dhinakaran says we dont want irattai ilai