இந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தால்., டெபாசிட் இழந்து நிற்க வேண்டும்!! தினகரன் அதிரடி!!
dhinakaran says about admk coalition
அமமுகவின் து பொதுச்செயலாளர் தினகரன் கள்ளக்குறிச்சி தியாகதுர்க்கத்தில் மக்கள் சந்திப்பு பயணத்தின் போது, "18 சட்டமன்ற உறுப்பினர்களின் தீர்ப்பு நமக்கு சாதகமாக வரும் என நினைத்தோம். ஆனால், அது நடக்கவில்லை.
எனினும் மக்கள் தீர்ப்பு வழங்கக்கூடிய வகையில், பாராளுமன்ற தேர்தல் மற்றும் 20 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வர இருக்கிறது. எடப்பாடி இதில் எட்டு தொகுதிகளை கைப்பற்ற முடியவில்லை என்றால், ஆட்சி மண்ணை கவ்வும்.
அதிமுக ஆட்சியில் உள்ளவர்கள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. காரணம் மக்கள் இந்த ஆட்சியின் மீது அதிருப்தியில் உள்ளனர். இது தெரிந்ததால் தான் கூட்டணி அமைக்கலாமென அதிமுக நினைக்கிறது.
இதற்கு சில கட்சிகளும் பலிகடா ஆக இருக்கிறது. அதிமுகவுடன் சேரும் எந்த கட்சியும் டெபாசிட்டை இழக்கும். எந்த கட்சி வந்தாலும் அதிமுக போன்றே பூஜ்ஜியமாக ஆகப்போகின்றது.
அதிமுக எத்தனை கட்சியை துணைக்கு அழைத்தாலும் வெற்றி பெற முடியாது என்பது உறுதி" என அவர் கூறியுள்ளார்.
English Summary
dhinakaran says about admk coalition