அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண்பிணம்!! அதிர்ச்சியில் போலீசார்!!
death in rajapalayam
ராஜபாளையம் அருகே தெற்கு மலையடிப்பட்டியை சேர்ந்த முத்துசாமி என்பவரது மகன் முருகானந்தம் (39) என்பவர் திருமணம் செய்து கொள்ளாதவராக இருந்தார். இவர் ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர்.
தாய் மீது அதீத பாசம் கொண்ட இவரது தாயார் சென்ற 24 ம் தேதி உயிரிழந்தார். இதனால் முருகானந்தம் மிகுந்த மனா உளைச்சலுக்கு ஆளானார்.
இந்நிலையில் திடீரென மாயமாகி விட்டார். அவரது தந்தை பல இடங்களில் அவரை தேடியும், கிடைக்கவில்லை. பின்னர் ராஜபாளையம் போலீசில் அவர் புகார் அளித்து இருந்தார்.
இந்நிலையில், முருகானநந்தம் சுந்தரராஜபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பிணமாக கிடந்துள்ளார். அவரது உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்துள்ளது. அவர் எப்படி இறந்தார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.