கணவன் இறந்த நிலையில், மாமியாரை கொடூரமாக வெட்டி விட்டு மருமகள் செய்த அதிர்ச்சி செயல்! - Seithipunal
Seithipunal


திருச்சி,திருவெறும்பூர் அருகேயுள்ள கிருஷ்ணசமுத்திரம் கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பொண்ணு. அவர் தனது  கணவர் மற்றும் மகன் உயிரிழந்ததால் வேறு யாரும் இல்லாத நிலையில் தனது மருமகள் ஈஸ்வரியுடன் வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில் இருவரும் ஒற்றுமையாக இருந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக மருமகள் ஈஸ்வரி மிகவும் மன அழுத்தத்துடன், ஏதோ மனநிலை பாதிக்கப்பட்டது போல இருந்துள்ளார்.

மேலும் நேற்றிரவு திடீரென பொண்ணுக்கும், ஈஸ்வரிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் அதிகரித்துள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த ஈஸ்வரி அங்கிருந்த அரிவாளை எடுத்து, தனது மாமியார் சின்ன பொண்ணுவை சரமாரியாக வெட்டியுள்ளார். 

பின்னர் வீட்டை விட்டு வெளியேறிய ஈஸ்வரி, ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் உள்ள மரத்தில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அரிவாளால் வெட்டப்பட்ட சின்னப்பொண்ணுவின் உடலை  மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

daughter in law killed her mother in law


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->