15 ஆயிரம் ரூபாய்காக ,தனது அண்ணனை அருகில் வைத்துகொண்டு தங்கை செய்த செயல், அவமானத்தில் தலைகுனிந்த அண்ணன் .!
தனது அண்ணனை அருகில் வைத்துகொண்டு தங்கை செய்த செயல், அவமானத்தில் தலைகுனிந்த அண்ணன் .!
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலத்தில் வசித்து வருபவர் சச்சிதானந்தம். இவரது மனைவி காந்திமதி. இவர்களது கரிகாலன் என்ற மகனும் மற்றும் சரஸ்வதி என்ற மகளும் இருந்தனர் .
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காந்திமதியின் கணவர் சச்சிதானந்தம் இறந்துவிட்டார். இதையடுத்து காந்திமதி மகன் கரிகாலன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் , கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் காந்திமதி தன மகள் சரஸ்வதிக்கு ரூ.15 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார்.
இதை அறிந்த மகன் கரிகாலன் இதுகுறித்து தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபமடைந்த காந்திமதி தனது மகள் சரஸ்வதி வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து கரிகாலன் கடந்த 15 ஆண்டுகளாக தனது தாயை பார்க்க ஒரு தடவை கூட வரவில்லை .
இந்நிலையில், காந்திமதி கடந்தசில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார் .பின்னர் நேற்று உயிரிழந்தார் .
இதுகுறித்து தகவலறிந்த கரிகாலன், இறந்த தனது தாயின் சடலத்தை தனது ஊருக்கு கொண்டு சென்று இறுதி சடங்கு செய்ய முடிவு செய்தார். ஆனால் சரஸ்வதி அதற்கு அனுமதிக்கவில்லை.மேலும் காந்திமதி இறப்பதற்கு முன், தனது இறுதி சடங்குகளை மகள் சரஸ்வதிதான் செய்யவேண்டும் எனவும் கூறியுள்ளார் .
இதைதொடர்ந்து சரஸ்வதி இறந்த தாயை பார்க்க அண்ணன் தனது வரக்கூடாது என்றும் , சுடுகாட்டிற்குவந்து பார்த்து கொள்ளட்டும் என்றும் கூறியுள்ளார். பின்பு தனது தாயின் அணைத்து இறுதி சடங்கை தானே முன்னின்று செய்து தயை அடக்கம் செய்தார்.அவரது அண்ணன் ஒரு ஓரமாக நின்று அனைத்தையும் பார்த்து கொண்டிருந்தார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
daughter done funeral formalities for mother