மாற்றுத் திறனாளி மகனைக் கதற கதற கொன்ற தந்தை..! அதன் பின் தந்தை செய்த விடயம்..!! விருதுநகரில் நடந்த சோகம்..!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் பாண்டியன் நகரில் உள்ள பாரதி தாசன் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 53). தச்சுத் தொழிலாளியாக இருந்தார். இவரது மனைவியின் பெயர் பாக்யலட்சுமி.

இந்த தம்பதியருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களில், மூத்த மகன்கள் இருவரும், சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மூன்றாவது மகன் பெயர் ராகுல் (வயது21)

ராகுல், கை கால்கள் செயல் படாத, வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளி. ராகுலை அவரது தந்தை தான், பராமரித்து வந்துள்ளார். இளைஞனான தன் மகனுடைய இயற்கை உபாதைகள் உட்பட அனைத்திற்கும், அவரே உறு துணையாக இருந்துள்ளார்.

முருகனுக்கு தன் மகனைக் கண்டு, கவலை அதிகமாகிக் கொண்டே இருந்தது. தனக்கு வயதாகி விட்டால், தன் மகனை யார் பார்த்துக் கொள்வார்கள்? அவனும் மற்றவர்களுக்கு பாரமாக இருப்பானே, என்று கலங்கிய தந்தை முருகன், நேற்று முன் தினம் இரவு, தன் வீட்டின் மாடிப் படிக்கு கீழே இருந்த 7 அடி ஆழ தண்ணீர் தொட்டியில், தன் மகனை் ராகுலைத் தள்ளி விட்டார்.

தன் மகனின் நிலையை எண்ணி கதறி அழுதார். பின், அருகில் உள்ள அறைக்குச் சென்று அவரும் துாக்கில் தொங்கி இறந்து போனார். நேற்று அதிகாலை 4.30 மணிக்கு, எழுந்த பாக்யலட்சுமி, தன் கணவர் துாக்கில் தொங்கியதையும், மகன் தண்ணீர் தொட்டியில் பிணமாக மிதந்து கிடந்ததையும் கண்டு கதறினார்.

    இந்த துயர சம்பவம் அந்தப் பகுதி மக்களைத் துக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DAD KILL physically challenged SON


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->