"வராண்டா முழுக்க ரத்தம் எப்படி சிந்தியது?" ஜெயலலிதாவின் சாவுக்கு இவர்கள் தான் காரணம்!! அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல்!!
cv.sanmugam says about jayalalitha death
அதிமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் என்ற கிராமத்தில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அந்த உரையில், " மறந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற போது நாங்கள் சென்று பார்க்க முயற்சி செய்தோம் . ஆனால், எங்களை கூட பார்க்க அனுமதிக்கவில்லை.
மொத்தமாக 71 நாட்கள் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால், அவர் சாதாரணமாக இறக்கவில்லை. ஒருவனை விஷம் கொடுத்து தான் சாகடிக்க வேண்டும் என்று இல்லை. வெல்லம் கொடுத்தே சாகடிக்கலாம் என கிராமத்தில் கூறுவார்கள்.
அதைத்தான் அவர்கள் செய்துள்ளனர். ஜெயலலிதாவுக்கு சர்க்கரை வியாதி இருப்பது அறிந்தும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவருக்கு அல்வா கொடுத்துள்ளனர்.
அவர்களின் நோக்கம் நோய்முற்றி அவர் இறக்க வேண்டும் என்பது தான். அவரை இயற்கையாக இறக்க வைக்க வேண்டும் என நினைத்து இவ்வாறு செய்துள்ளார். ஜெயலலிதாவை சதித்திட்டம் போட்டு நம்மிடம் இருந்து பிரித்து விட்டனர்.
உடல்நிலை குணமாகி வருகையில் ஒருவருக்கு திடீரென எப்படி மாரடைப்பு வரும்? அப்படியே இருந்தாலும் வராண்டா முழுக்க ரத்தம் எப்படி சிந்தியது? இதையெல்லாம் நாங்க கேக்க கூடாதா?
இவர்களை விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தால் உண்மை வெளிவரும். இப்பொழுதும் அதை தான் வலியுறுத்துகிறோம். கொடுமையான சாவை ஜெயலலிதாவுக்கு கொடுத்து விட்டார்கள். அதிகாரம், வாழ்க்கை, வசதி வாய்ப்பு இத்தனை இருந்தும் இந்த சாவு வந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை" என தொடர்ந்து ஆவேசமாக பேசியுள்ளார்.
English Summary
cv.sanmugam says about jayalalitha death