பேரிடர் பயிற்சியில் கோவை மாணவி உயிரழப்பு குறித்து திடுக்கிடும் தகவல்..!! தேசிய பேரிடர் மேலாண்மை அறிவிப்பு ..!!
பேரிடர் பயிற்சியில் கோவை மாணவி உயிரழப்பு குறித்து..! தேசிய பேரிடர் மேலாண்மை திடுக்கிடும் தகவல்..!!
நேற்று கோவையில் என்.எஸ்.எஸ். பயிற்சியின் போது மாணவி ஒருவர், 3-வது மாடியிலிருந்து 2-வது மாடியின் சன்ஷேடில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் கோவையில் நடந்த பேரிடர் பயிற்சிக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.
கோவை நரசிபுரத்தில் உள்ள கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில், பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் நேற்று என்.எஸ்.எஸ். பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியாளர் ஆறுமுகம், கல்லூரியின் 3-வது மாடி விளிம்பில் நின்று கொண்டு, கீழே குதிப்பது குறித்து மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். சில மாணவிகள் கயிற்றைக் கட்டிக் கொண்டு, கீழே மாணவர்கள் பிடித்திருந்த வலையில் குதித்தனர்.
அவர்களைத் தொடர்ந்து, பிபிஏ இரண்டாம் ஆண்டு மாணவியான லோகேஸ்வரி குதிக்க முன்வந்தார். லோகேஸ்வரி இடுப்பில் கயிறை கட்டிக் கொண்டு தயாராகும் முன்பே, பயிற்சியாளர் ஆறுமுகம் கவனக்குறைவாக தள்ளிவிட்டார். ஆனால் குதிக்க தயாராகாத லோகேஸ்வரி, 3-ஆம் மாடியிலிருந்து 2-ஆம் மாடியின் சன்ஷேடில் விழுந்து கீழே விழுந்தார்.
விழுந்த வேகத்தில் முகத்திலும் கழுத்தில் பலத்த காயமுற்ற லோகேஸ்வரி, முதலில் தொண்டாமுத்தூரில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவி, வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து ஆலாந்துறை போலீசார் பயிற்சியாளர் ஆறுமுகத்தைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கோவை மாணவி பலியானது குறித்து, தேசிய பேரிடர் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில்,
கோவையில் நடந்த பேரிடர் பயிற்சிக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை
பயிற்சி அளித்தவர் எங்கள் ஆணையத்தை சேர்ந்தவர் இல்லை.
பயிற்சி அளித்தவர் என்டிஎம்டிவை சேர்ந்தவர் இல்லை
அவர் எங்களிடம் பயிற்சி பெறவே இல்லை.
மாணவி பலியானது வருத்தமளிக்கிறது.
பேரிடர் பயிற்சியில் இறந்த மாணவியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாக, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
English Summary
Covai student dies during disaster