பெற்றோருக்கு பயந்து காதலனுடன் எலி மருந்து தின்ற பள்ளி மாணவி.! சுவாமிமலை அருகே பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை அருகே நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்த பதினேழு வயது மாணவி கடந்த 25-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே செநின்றுள்ளார். அதன் பிறகு அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள் மாணவியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து மாணவியின் தந்தை, சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மாயமான மாணவியும், அதே கிராமத்தை சேர்ந்த 22 வயதான வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 25-ந் தேதி திருச்சிக்கு சென்று அங்கு திருமணம் செய்து கொண்டனர். 

பின்னர் வீட்டிற்குச் சென்றால் பெற்றோர் தங்களை பிரித்து விடுவார்கள் என்பதால் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்து, நேற்று முன்தினம் தஞ்சை பழைய பேருந்து நிலையத்திற்கு வந்து எலி மருந்தை தின்று விட்டு இரவு அங்கேயே தங்கியுள்ளனர். நேற்று காலை இருவரும் தங்களது பெற்றோரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு எலி மருந்து தின்ற விவரத்தை தெரிவித்துள்ளனர்.

பின்னர் இருவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெற்றோருக்கு பயந்து காதலர்கள் எலி மருந்தை தின்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

couples sucide attempt in thanjavur samimalai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->