இரண்டாவது நாளாக தொடரும் ஐடி ரைடு! சிக்கும் பல பிரபலங்கள்!!
இரண்டாவது நாளாக தொடரும் ஐடி ரைடு! சிக்கும் பல பிரபலங்கள்!!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியை சேர்ந்தவர் செய்யாத்துரை (வயது 60). இவர் அரசு முதல் நிலை காண்டிராக்டர். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறைகளில் நடைபெறும் பல்வேறு சாலைப்பணிகள், கட்டிட கட்டுமான பணிகள் போன்றவற்றை தமிழகம் முழுவதும் செய்து வந்தார்.
இந்நிலையில், பாலையம்பட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று காலை 6 மணி அளவில் வருமான வரித்துறையினர் 5 கார்களில் வந்து அதிரடியாக நுழைந்தனர். வீட்டிற்குள் இருந்த யாரையும் வெளியே செல்லவும், யாரும் உள்ளே வரவும் அனுமதி மறுக்கப்பட்டது. 16-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர். ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் சென்னையில் அரசு ஒப்பந்ததாரரின் வீடு, அலுவலகத்தில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. அருப்புக்கோட்டையில் நடைபெறும் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
செய்யாத்துரைக்கு சொந்தமான 3 வீடுகள் மற்றும் நிறுவனங்கள், அந்த நிறுவனங்களுடன் தொடர்புடைய கூட்டு நிறுவனங்களிலும் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் ரூ.160 கோடி ரொக்கம், 100 கிலோ தங்கம் மற்றும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
English Summary
continue the second day for id raid