நெல்லை நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! பழுதான போனுக்கு பதிலாக புதிய ஐபோன்.!! சமானியனின் போராட்டம் வெற்றி .!!! - Seithipunal
Seithipunal


நெல்லையில் செல்போன் பழுதை உரிய காலத்தில் சரிசெய்து தராததால் வாடிக்கையாளருக்கு புதிய செல்போன் மற்றும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நெல்லையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ஆப்பிள் ஐபோன் ஒன்றை சமீபத்தில் வாங்கினார்.  ஆனால்  மொபைல் அதிகளவில் சூடானதால் மொபைலை சரி செய்யுமாறு சர்வீஸ் சென்டரிடம் கொடுத்து இருந்தார். 

ஆனால் பல்வேறு காரணங்களை கூறி போனை சரி செய்யாமல்  காலம் தாழ்த்தி வந்து இருக்கிறார்.  பலமுறை  சர்வீஸ் சென்டர் சென்றும் உரிய பதிலளிக்காமல்  நிர்வாகம் அலைக்கழித்ததாக செந்தில்குமார் தெரிவித்தார்.

இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான இவர், மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தார் . வழக்கை விசாரித்த நீதிபதிகள், அவருக்கு புதிய ஆப்பிள் ஐபோன் மற்றும் நஷ்ட ஈடாக ரூ.9ஆயிரம் வழங்குமாறு செல்போன் நிறுவனத்திற்கும் உத்தரவி்ட்டார்.

இந்நிலையில், சமானியனின் போராட்டம் வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன் என்று  செந்தில்குமார் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Consumer Court New Judgement Give New I Phone


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->