தன் சைக்கிள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய போலீஸ் ஏட்டு மீது, புகார் அளித்த பள்ளி மாணவன்…! அடுத்து என்ன நடந்தது தெரியுமா? - Seithipunal
Seithipunal


 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் போலீஸ் ஸ்டேசனில், தலைமை காவலராகப் பணி புரிந்து வருகிறார் விஜயகுமார்.

சிவகங்கைக்கு அருகில் உள்ள தமறாக்கியில பாதுகாப்பு பணிக்காக ஏட்டு விஜயகுமார் தனது பைக்கில் சென்றார். அப்போது சாலையோரம்  சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒரு பள்ளி மாணவர் மீது மோதினார்.

இதனால், நிலை தடுமாறிய அந்த மாணவர் கீழே விழுந்து காயமடைந்தார். பைக்கை ஓட்டி வந்த ஏட்டு விஜயகுமாரும் காயமடைந்தார். மாணவர், ஏட்டு அருகில் சென்ற போது, ஏட்டுவிடமிருந்து மது வாசனை “குப்” என்று அடித்தது. போதையில் தன் மீது, வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாக்கிய, போதை ஏட்டு விஜயகுமார் மீது, அந்த பள்ளி மாணவர், சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரித்த போது, ஏட்டு குடி போதையில் இருந்தது, தெரிய வந்தது. இதனால், போதை ஏட்டு விஜயகுமாரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார், சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஜெயச்சந்திரன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

complaint against the drunker police


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->