வீடு வரை விரட்டிய போலீசாரின் மூக்கை உடைத்து அனுப்பிய வாலிபரல் பரபரப்பு!
வீடு வரை விரட்டிய போலீசாரின் மூக்கை உடைத்து அனுப்பிய வாலிபரல் பரபரப்பு!
தேனி மாவட்டம் போடி, பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டவுன் போலீசார், நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக, ஜே.கே. பட்டியைச் சேர்ந்த பிரபு (வயது 32) என்பவர், டூ வீலரில் சென்று கொண்டிருந்தார். அவரை போலீசார் வழி மறித்து, நிற்கச் சொன்னார்கள்.
ஆனால், பிரபு நிற்காமல், பைக்கில் சென்று விட்டார். இதனால், ஆத்திரம் அடைந்த போலீசார், ஆனந்த் மற்றும் ஜெயராமன் ஆகிய இருவரும், பைக்கில், பிரபுவைத் தொடர்ந்து விரட்டிச் சென்றனர். அதற்குள், பிரபு வீடு வந்து விட்டது. வீட்டிற்குள் சென்றவரை, வலுக்கட்டாயமாக இழுத்து வந்தனர், போலீசார். அதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்தது.
பின், அவர்கள் பிரபுவைத் தாக்கத் துவங்கினர். இதனால், பிரபுவும் போலீசாரைத் திரும்பத் தாக்கினார். அதில் போலீஸ் ஆன்ந்த்தின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. பின், இரண்டு போலீசாரும் பிரபுவை மூர்க்கத்தனமாகத் தாக்கினர். இதனால், பிரபு படுகாயம் அடைந்தார். பின் பிரபுவை, போடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதனைக் கண்டு, ஆத்திரம் அடைந்த பிரபுவின் உறவினர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர், போடி காவல் நிலையத்தை முற்றுகை இட்டனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் சேகர் பேச்சு வார்த்தை நடத்தினார். இரண்டு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும், என்று உறுதி அளித்தார். அதன் பின்னரே அவர்கள் கலைந்து சென்றார்கள்.
English Summary
common man attacked police nose