அரியர்ஸ் வைத்த மாணவன்.! தந்தை திட்டியதால்.. கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட பரிதாபம்.!!
அரியர்ஸ் வைத்த மாணவன்.! தந்தை திட்டியதால்.. கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட பரிதாபம்.!!
அரியர்ஸ் வைத்ததால், அப்பா திட்டினார்…. அதற்குப் போய்…தன் கழுத்தை பிளேடால் அறுத்து தற்கொலை செய்து கொண்ட கல்லுாரி மாணவர்….
பெற்றோர், தங்கள் பி்ள்ளைகளுக்காகத் தான் வாழ்கிறார்கள். அதனால், அவர்களுக்கு தேவையானதை, சிரமபட்டு வாங்கிக் கொடுப்பது போல, அவர்கள் தவறு செய்யும் போது, தட்டிக் கேட்கும் உரிமையும் அவர்களுக்கு உண்டு.
அதைத் தவறாகப் புரிந்து கொள்பவர்கள், தவறான முடிவைத் தேடிக் கொள்வது தான் பரிதாபம்!
மதுரையை அடுத்துள்ள, மேலுார் அருகே உள்ள எலியார்பத்தியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் பெயர் வேல்முருகன் (வயது 24). இவர் தற்போது, பட்ட மேற் படிப்பாக, பி.எல். படித்து வந்தார்.
கடந்த ஜுலை 2-ஆம் தேதி, மேலுார் அருகே உள்ள மலம்பட்டி மலை அடிவாரத்தில், வேல்முருகன், கழுத்தில் ரத்தம் பெருகி வர மயங்கி கிடந்தார். அந்தப் பகுதியில் ஆடு மேய்த்தவர்கள், இதனைக் கண்டு, ஊரில் சொன்னார்கள்.
அதனால், முருகனை, மேலுார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின், அவரை மேல் சிகிச்சைக்காக, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், நேற்று, அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார். பி.எல். படிப்பில், 4 அரியர்ஸ் இருந்ததால், அவரது தந்தை திட்டி உள்ளார்.
அதைப் பொறுக்க முடியாமல், முருகன், பிளேடால், தனது கழுத்தை அறுத்துக் கொண்டார், என்பது விசாரணையில் தெரியவந்தது.
English Summary
COLLEGE STUDENT SUICIDE FOR EXAM FAIL