கஞ்சாவிற்காக பணத்தை அள்ளிக்கொடுத்த கல்லூரி மாணவன்! ஏமாந்து நின்றதால் சினிமாப்பாணியில் அரங்கேற்றிய தில்லுமுல்லு நாடகங்கள்!
college student kidnapped money fraud youngman
சென்னையை அடுத்த அம்பத்தூரில் வசித்து வருபவர் சுரேஷ். இவர் ஜெ.ஜெ.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தது வருகிறார். இவருக்கு சமீபத்தில் இமயாத் அலி என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இமாயத் சுரேஷிடம், தன்னிடம் விலை உயர்ந்த அதிக போதை ஏற்படுத்தும் கஞ்சா இருப்பதாக ஆசை வார்த்தை கூறி ரூ.80 ஆயிரத்தை பெற்றுள்ளார்.ஆனால் கூறியபடி கஞ்சாவை கொடுக்கவில்லை. மேலும் அதற்கான பணத்தை திருப்பி கேட்டும் கொடுக்கவில்லை.
இந்நிலையில் சுரேஷ் தன்னை ஏமாற்றிய இமயாத் அலியிடம் பணத்தை திரும்ப பெறுவதற்காக, நேற்று முன்தினம் செல்போன் மூலம் அவரை தொடர்பு கொண்டு தனக்கு கஞ்சா தேவைப்படுவதாகவும், பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம் அருகே பணத்துடன் காத்திருப்பதாவும் தெரிவித்துள்ளார் .
இதனை தொடர்ந்து இமயாத் அலி தனது உறவினர் சுஹைப் என்பவரை அங்கு அனுப்பியுள்ளார். அங்கு காரில் தயாராக இருந்த சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சுஹைப்பை காரில் கடத்தி சென்றனர்.
பின்பு இமயாத் அலியை தொடர்பு கொண்டு, “சுஹைப்பை கடத்தி விட்டோம். ரூ.80 ஆயிரத்தை கொடுத்தால் அவரை விடுவோம்” என தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்த சுஹைப்பின் பெற்றோர் மகன் கடத்தப்பட்டது குறித்து போலீசில் புகார் கொடுத்தனர்.
அதனை தொடர்து போலீசார் சுரேஷ் மீண்டும் போன் செய்தபோது “நாங்கள் சுஹைப்பின் பெற்றோர் பேசுகிறோம். போரூர் அருகே வந்தால் நீங்கள் கேட்ட பணத்தை கொடுத்து விடுகிறோம்” என கூறியுள்ளனர்.
இதனை நம்பிய சுரேஷ் தனது நண்பர்களுடன் போரூர் அருகே காரில் வந்தபோது அங்கு பதுங்கியிருந்த போலீசார் அவர்களை மடக்கிப்பிடித்து கைது செய்தனர் .பின்னர் காரில் இருந்த சுஹைப்பை மீட்டனர்.
இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
college student kidnapped money fraud youngman