வீட்டில் செல்போனில் கேம் விளையாடிய மாணவன்! குடும்பத்தினர் சொன்ன ஒத்த வார்த்தை!! மாணவன் எடுத்த விபரீதம்!
college student get suicide
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சுந்தரவேல் என்பவரின் மகன் ஜனகன். இவர் காரைக்குடியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். ஜனகனுக்கு செல்போனில் கேம் விளையாடும் பழக்கம் இருந்துள்ளது.
இந்தநிலையில் ஜனகன் வீட்டில் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அதனை பார்த்த அவரது குடும்பத்தினர்கள் ஜனகனை எப்பொழுது பார்த்தாலும் செல்போனில் கேம் விளையாடுகிறாயே என கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த ஜனகன் வழக்கம்போல் இரவு மாடியில் தூங்க சென்றுள்ளார். வீட்டில் உள்ள அனைவரும் இப்படி கூறிவிட்டார்கள் என மன வேதனையில் மடியில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் ஜனகன் கீழே இறங்கி வராததால், வீட்டில் இருந்தவர்கள் மாடிக்கு சென்று பார்த்துள்ளனர். அங்கிருந்த அறையில் ஜனகன் தூக்கில் தொங்கியதை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்கு பதிவு செய்து, ஜனகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
college student get suicide