விடுதியில் அரங்கேறும் மர்மங்கள்.. மூடி மறைக்கப்படும் இரகசியம் - தூக்கில் தொங்கிய சடலத்தின் பின்னணியில் மறைக்கப்படும் உண்மைகள்.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டம், சின்னகொளம் பாக்கம் கிராமத்தில் கற்பக விநாயக மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

இக்கல்லூரியில் விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம்காட்ராம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தேஷ்வர் அரவிந்த் விடுதியில் தங்கி 3 ஆம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில்,  சில தினங்களுக்கு முன்பு இரவு உணவு அருந்த தேஷ்வர் அரவிந்த் வரவில்லை. பின்னர் மாணவர்கள் அவரை தேடியுள்ளனர்.

அப்போது தேஷ்வர் அரவிந்த், விடுதியில் உள் ஒரு அறையில் தூக்கில் தொங்கியபடி இருந்ததாகக் கூறப்படுகிறது.

இது பற்றி தகவல் அறிந்து வந்த காவலர்கள் மாணவனின் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தேஷ்வர் அரவிந்த் இறந்ததை அறிந்த தந்தைராஜேந்திரன் மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது, மாணவனின் உடம்பில், பல இடங்களில் காயம் இருந்துள்ளது எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர்,படாளம் காவல் நிலையத்தில் தனது மகன் சாவில் மர்மம் இருக்கின்றது.

ஆகவே கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என புகார் மனு அளித்தார். ஆனால் புகாரைக் காவல் ஆய்வாளர் ரமேஷ் வாங்க மறுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாணவனின் உறவினர்கள் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இறந்த மாணவனின் உடலை மருத்துவர்கள் குழு உடற்கூறு ஆய்வு செய்திட வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து 2 மருத்துவர்கள் குழு உடற்கூறு ஆய்வு செய்தது. பின்னர் மாணவனின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college student commits suicide secret


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->