கோவை கல்லூரி முதல்வரின் அலட்சியமான பதில்.! பயிற்சியாளரின் பேச்சைக் கேட்காத மாணவி.!! அதனால் தான் தள்ளி விட்டார் பயிற்சியாளர்!!!
கோவை கல்லூரி முதல்வரின் அலட்சியமான பதில்.! பயிற்சியாளரின் பேச்சைக் கேட்காத மாணவி.!! அதனால் தான் தள்ளி விட்டார் பயிற்சியாளர்!!!
நேற்று முன் தினம் கோவையில் என்.எஸ்.எஸ். பயிற்சியின் போது மாணவி ஒருவர், 3-வது மாடியிலிருந்து 2-வது மாடியின் சன்ஷேடில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் கோவையில் நடந்த பேரிடர் பயிற்சிக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.
கோவை நரசிபுரத்தில் உள்ள கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில், பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் நேற்று என்.எஸ்.எஸ். பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியாளர் ஆறுமுகம், கல்லூரியின் 3-வது மாடி விளிம்பில் நின்று கொண்டு, கீழே குதிப்பது குறித்து மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். சில மாணவிகள் கயிற்றைக் கட்டிக் கொண்டு, கீழே மாணவர்கள் பிடித்திருந்த வலையில் குதித்தனர்.
அவர்களைத் தொடர்ந்து, பிபிஏ இரண்டாம் ஆண்டு மாணவியான லோகேஸ்வரி குதிக்க முன்வந்தார். லோகேஸ்வரி இடுப்பில் கயிறை கட்டிக் கொண்டு தயாராகும் முன்பே, பயிற்சியாளர் ஆறுமுகம் கவனக்குறைவாக தள்ளிவிட்டார். ஆனால் குதிக்க தயாராகாத லோகேஸ்வரி, 3-ஆம் மாடியிலிருந்து 2-ஆம் மாடியின் சன்ஷேடில் விழுந்து கீழே விழுந்தார்.
விழுந்த வேகத்தில் முகத்திலும் கழுத்தில் பலத்த காயமுற்ற லோகேஸ்வரி, முதலில் தொண்டாமுத்தூரில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவி, வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தத்தவே தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலி அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில், மாணவி லோகேஸ்வரியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும், உரிய அனுமதி பெறாமல், கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும், முறையற்ற பயிற்சி வழங்கிய ஆறுமுகம் என்பவரை கைது செய்து, விசாரணை நடைபெற்று வருவதாகவும். தமிழக முதலமைச்சர் எடப்பாடி முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, போலி பயிற்சியாளர் ஆறுமுகத்திற்கு போலி சான்றிதழ் தயாரிக்க உதவிய அசோக் என்பவரை ஈரோடு தனிப்படை காவலர்கள் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய அந்த கல்லூரியின் முதல்வர் விஜயலட்சுமி, பயிற்சியின் போது பயிற்சியாளரின் வழிகாட்டுதலை பயமின்றி பின்பற்றியிருந்தால் மாணவி லோகேஸ்வரி, உயிரிழந்திருக்க மாட்டார் எனவும் பயிற்சியாளரின் பேச்சைக் கேட்காததால் தான் இச்சம்பவம் நடைபெற்றது எனவும் கூறியுள்ளார். முதல்வரின் இந்த பொறுப்பற்ற பேச்சு மாணவர்களையும் பெற்றோர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
English Summary
college principal talk about student logeswari death