ஹாஸ்டல் மாணவி திடீரென மாடியிலிருந்து குதித்த பரிதாபம்!! அதிர்ச்சியில் சக மாணவிகள்!! அலறியடித்து ஓடிவந்த பெற்றோர்கள்!!
ஹாஸ்டல் மாணவி திடீரென மாடியிலிருந்து குதித்த பரிதாபம்!! அதிர்ச்சியில் சக மாணவிகள்!! அலறியடித்து ஓடிவந்த பெற்றோர்கள்!!
விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம், மேல்வெண்ணீயூர் பகுதியை சேர்ந்த மீரா (20) என்பவர் சேலம், கோரிமேட்டிலுள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சேலத்தில் உள்ள அரசு விடுதியில் தங்கி படித்துவந்த மீரா, நேற்று இரவு விடுதியின் முதல் மாடியிலிருந்து திடிரென கீழே விழ அலறல் கேட்டு ஓடிவந்த மற்ற மாணவிகள் அவரை மீட்டு மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு, மீராவுக்கு முதலுதவி அளித்து உள்நோயாளிகள் பிரிவில் சேர்த்தனர். இதனை தொடர்ந்து மீராவுக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி டாக்டர்கள் 'மீராவுக்கு முதுகு எலும்பில் அடிபட்டுள்ளது., அதற்கான சிகிச்சைகள் தற்போது அளித்து வருகிறோம்' என்றனர். விடுதி மாணவிகள், விழுப்புரத்தில் வசிக்கும் மீராவின் பெற்றோருக்கு இந்த சம்பவம் பற்றி தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார், விசாரித்ததில், 'கடந்த 3 நாட்களாக மீராவுக்கு காய்ச்சல் இருந்து வந்ததாகவும், இதனால் மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு விடுதி அறையில் ஓய்வெடுத்து வந்தார். நேற்று இரவு விடுதி அறையில் புழுக்கமாக இருந்துள்ளதால் காற்றோட்டம் வாங்க வெளியே வந்து விடுதி மேல் மாடி சுவரில் அமர அப்போது திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார்' என்று கூறினர்.ஆனாலும், போலீசார், வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
college girl jumbs from building